மகிமையின் எல்லை முதல்
மகிமையின் எல்லை முதல்
பூமி எங்கும் பறந்து,
பாடினீர் படைப்பினன்று
மேசியா வருகையும்,
பல்லவி
வந்து வாழ்த்தி போற்றி பாடி
இராஜ பாலன் தொழுவோம்.(ஆமேன்.)
மேய்ப்பர் மந்தை காத்திருக்க
இராவின் இருள் குளிரில்,
மண்ணோருடன் விண்ணின் தேவன்
சஞ்சரிக்க ஒளியாய்,
ஞானியரே யோசனை ஏன்?
ஜோதி எங்கும் வீசுதே,
வாரும் பாரும் மாந்தர் வாஞ்சை
விந்தை நட்சத்ரம் கண்டீர்,
தூய ஆவி கொண்ட நீங்கள்,
பயத்தோடு நம்பியே,
காத்திருக்க வேந்தர் வந்தார்
தோன்றுவார் தம் ஸ்தலத்தில்,
வாஞ்சித்தே மனந்திரும்ப
நரகத்தை தவிற்க,
நியாயத்தீர்ப்பு தீர்த்திடாமல்
தயவாய் கட்டவிழ்க்க,
இன்று காணும் பாலனிவர்,
தன் தந்தையின் ஸ்தானத்தில்,
தேசம் யாவும் அவர் முன்னர்
முடக்கும் முழங்கால்கள்.
அவர் படைப்பாய் நாம் ஒன்றாய்
பிதா சுதன் ஆவிக்கு
என்றும் ஒன்றாய் ஓர் தொனியாய்
மூவரான ஏகர்க்கே.
மகிழ்ச்சி பண்டிகை
1. மகிழ்ச்சி பண்டிகை கண்டோம்,
அகத்தில் பாலனைப் பெற்றோம்;
விண் செய்தி மேய்ப்பர் கேட்டனர்,
விண் எட்டும் மகிழ் பெற்றனர்.
2. மா தாழ்வாய் மீட்பர் கிடந்தார்,
ஆ! வான மாட்சி துறந்தார்;
சிரசில் கிரீடம் காணோமே,
அரசின் செல்வம் யாதுமே.
3. ஆ! ஆதி பக்தர் தேட்டமே!
ஆ! ஜோதி வாழ்வின் விடிவே!
ஆ! ஈசன் திரு வார்த்தை நீர்!
தாவீதின் மைந்தன் கர்த்தன் நீர்.
4. பண்டிகை இன்றே வருவீர்,
திண்ணமாய் நெஞ்சில் தங்குவீர்;
ஓய்ந்த எம் கானம் மீண்டிடும்,
ஓய்வின்றி பூரித்தார்த்திடும்.
https://youtu.be/IrnCvx9_Yns?si=lJARqUP_tnoQG4fm3>
மீண்டும் பாடுவோம் மீட்பரன்பை
1. மீண்டும் பாடுவோம் மீட்பரன்பை
என்றும் அவ்வன் பழியாததே!
வெட்டுண்ட தேவாட்டுக்குட்டியின்
இரத்தத்தை வாழ்த்திப் புகழுவோம்.
பல்லவி
இயேசுவின் இரத்தத்தால்
சுத்திகரிப்பு நமக்குண்டு!
இயேசுவின் இரத்தத்தால்
சுத்திகரிப்பு நமக்குண்டு!
2. சுத்தமும் சுகமும் உண்டாகும்
அத்தன் இரத்தத்தில் மூழ்குவோர்க்கு
நித்தமும் மா சந்தோஷ முண்டு
இத்தரையில் அவர் இரத்தத்தால்!
3. இங்கவ ரன்பை ருசிக்கவே
பொங்குதே ஆனந்தம் புண்யனால்!
அங்குள்ளோர் பாட்டில் நாம் கூடினால்
ஆர் அம் மகிமையை கூறுவார்!
4. யுத்தம் முடிந்தது என்று நம்
கர்த்தன் சொல்லும்வரை முன் செல்வோம்!
நித்திய மகிமை வீட்டிலே
சத்யன் நம்மை அழைத்துச் செல்வார்.
5. அதால் பரிசுத்தம் என்ற நம்
அமர்க் கொடியும் பறக்கட்டும்!
அந்தத்தில் அவர் கையினின்று
அழகான கிரீடம் பெறுவோம்!
1. meenndum paaduvom meetparanpai
entum avvan paliyaathathae!
vettunnda thaevaattukkuttiyin
iraththaththai vaalththip pukaluvom.
Pallavi
Yesuvin iraththaththaal
suththikarippu namakkunndu!
Yesuvin iraththaththaal
suththikarippu namakkunndu!
2. suththamum sukamum unndaakum
aththan iraththaththil moolkuvorkku
niththamum maa santhosha munndu
iththaraiyil avar iraththaththaal!
3. ingava ranpai rusikkavae
ponguthae aanantham punnyanaal!
angullor paattil naam kootinaal
aar am makimaiyai kooruvaar!
4. yuththam mutinthathu entu nam
karththan sollumvarai mun selvom!
niththiya makimai veettilae
sathyan nammai alaiththuch selvaar.
5. athaal parisuththam enta nam
amark kotiyum parakkattum!
anthaththil avar kaiyinintu
alakaana kireedam peruvom!
பொங்கிடும் உதிர ஊற்றுண்டு
பொங்கிடும் உதிர ஊற்றுண்டு இம்மானுவேலினதே,
அவ்வூற்றில் மூழ்கும் பாவிகள் முற்றும் தூயோராவாரே,
முற்றும் தூயோராவாரே, தூயோராய் ஆவாரே,
அவ்வூற்றில் மூழ்கும் பாவிகள் முற்றும் தூயோராவாரே.
சாகும் அக்கள்வன் குரூசினில் கண்டான் மகிழந்ததை,
நாமும் அப்பாக்யம் காண்போமே நம் பாவம் நீங்கவே,
நம் பாவம் நீங்கவே, நம் பாவம் நீங்கவே,
நாமும் அப்பாக்யம் காண்போமே நம் பாவம் நீங்கவே.
ஆம் தேவ ஆட்டின் இரத்தமே என்றும் தீரா ஜீவனே,
சபையோரெல்லோரும் மீண்டிட்டே இனி பாவம் செய்யாமல்,
இனி பாவம் செய்யாமல், ஆம் பாவம் செய்யாமல்,
சபையோரெல்லோரும் மீண்டிட்டே இனி பாவம் செய்யாமல்.
நானும் கண்டேன் விஸ்வாசத்தால் உம் காயம் செய்யும் மாயம்,
நல் மீட்பை தந்தே காத்திடும் நான் சாகுமட்டுமே,
நான் சாகுமட்டுமே, நான் சாகுமட்டுமே,
நல் மீட்பை தந்தே காத்திடும் நான் சாகுமட்டுமே.
மற்றோர் இன் பாடல் பாடுவேன் உம் மீட்பின் வல்லமை,
திக்கிடும் என் நாவும் பாடுமே மரித்தே கிடக்கையில்,
மரித்தே கிடக்கையில், நான் மாண்டென் குழியில்,
மற்றோர் இன் பாடல் பாடுவேன், மரித்தே கிடக்கையில்.
ஆண்டவா நீர் எனக்காயத்தம் செய்தீர்ரென்றறிவேன்,
பாத்ரமில்லா எனக்காகவே தங்க சுரமண்டலம்,
தங்க சுரமண்டலம், தங்க சுரமண்டலம்,
பாத்ரமில்லா எனக்காகவே தங்க சுரமண்டலம்.
காலா காலமாய் மீட்டியே தேவ வல்லமையினால்,
கலையா ஸ்ருதியுடன் மீட்டியே உம் நாமம் போற்றிடவே,
உம் நாமம் போற்றிடவே, உம் நாமம் போற்றிடவே,
கலையா ஸ்ருதியுடன் பாடியே உம்மை மாத்ரம் போற்றிடவே
பொன்னகர் இன்பத்தை
பொன்னகர் இன்பத்தைப் பெற்றிடுவோம்
துன்பமும் துக்கமும் மாறியே போம்
நன்மைச் சொரூபியை தரிசிப்போம்
நீடுழி காலம் பேரின்பமுண்டாம்.
Ref
பேரின்பமாம், பூரிப்புண்டாம்
பேரின்பமாம், பூரிப்புண்டாம்
மேலுலகில் அவர் சந்நிதியில்
மேலான வாழ்வு பேரின்பமுண்டாம்.
மாட்சிமையான காருணியத்தால்
மோட்ச ஆனந்தத்தை அடையுங்கால்
சாட்சாத் நல் மீட்பரை நோக்குவதால்
நீடூழி காலம் பேரின்பமுண்டாம்.
அன்பராம் இஷ்டரைக் கண்டுகொள்வோம்,
இன்ப மா வாரியில் மூழ்கிடுவோம்
என்றைக்கும் இயேசுவை ஸ்தோத்திரிப்போம்
நீடூழி காலம் பேரின்பமுண்டாம்.
முள் கிரீடம் பூண்ட
1. முள் கிரீடம் பூண்ட நாதனார்
மா மாட்சி பெற்றாரே
விண் கிரீடம் இப்போ சூடினார்
வென்றோராம் வீரரே.
2. உன்னத ஸ்தானம் விண்ணிலே
இவர்க்கே சொந்தமாம்
மன்னாதி மன்னர் கர்த்தரே
விண் மாட்சி ஜோதியாம்.
3. அண்ணலின் நாமம் அன்பையும்
நன்றாய் அறிந்தோராம்
விண்ணோர் மண்ணோர் மகிழ்ச்சியும்
இம்மீட்பர் நாதராம்.
4. சிலுவையின் மா நிந்தையும்
பேரருள் பெறுவார்
நிலையாம் நாமம் பூரிப்பும்
அன்னோர் அடைகுவார்.
5. நாதர்போல் பாரில் பாடுற்றே
அவரோடாள்வாராம்
தெய்வன்பின் மறை அறிவே
சந்தோஷம் பலனாம்.
6. நிந்தை சாவான சிலுவை
நம் ஜீவன் சுகமாம்
நம் சம்பத்து, நம் நம்பிக்கை
நம் ஓயா தியானமாம்.
மெய்த்தேவனைத் துதி
1. மெய்த்தேவனைத் துதி; பேர் நன்மை செய்தார்,
குமாரனைத் தந்துன்னையே நேசித்தார்.
உன் பாவத்துக்காய் யேசுவே மரித்தார்.
நீ ஜீவனை பெற ஆருயிர் தந்தார்.
பல்லவி
போற்றுவோம்! போற்றுவோம்!
ஜீவ நாயகரை,
நம்புவோம்: நம்புவோம்!
லோக ரட்சகரை!.
ஓ ஏசுவின் மூலம் நற்கதியுண்டாம்.
பிதாவின் சமூகம் கண்டடையலாம்.
2. சம்பூரண மீட்பைச் சம்பாதித்தனர்.
தம் வாக்கை அன்பருக்கருள்வேன் என
எப்பாவியானாலும் விஸ்வாசம் வைத்தால்
அந்நேரமே மன்னிப்பு உண்டாம் ஏசுவால்.
3. அதிசயமான அன்பின் பெருக்கே!
யேசுவினாலே வரும் மகிழ்ச்சியே! அந்நாளில்
இயேசுவை நான் பார்க்கும் போது
உண்டாகும் மகிழ்ச்சிக்கு வரம்புண்டோ?
1. Mei devanai thuthi Per nanmai seithaar,
Kumaaranai thanthunnaiye nesiththaar,
Un paavaththukaai yesuve mariththaar,
Nee jevanai pera aaruir thanthaar.
Pallavi
Potruvom! Potruvom!
Jeeva nayakarai,
Nambuvom! Nambuvom!
Loka retchakarai!
O! Yesuvin moolam narkathi undaam,
Pithaavin samookam kandadaiyalaam.
2. Sampoorana meetpai sampaathiththanar
Tham vaakai anbarukkarulven ena
Eppaaviyaanaalum visvaasam vaiththaal
Annerame manippundaam yesuvaal.
3. Athisayamaana anbin peruke!
Yesuvinaale varum makizhchiye!
Annaalil yesuvai naan paarkkum pothu
Undaakum mahizhchiku varampundo?