Tamil Hymn க-வி

மகா அற்புதம்


மகா அற்புதம், மா பாவியாம் என்னை
மீட்ட உம் அன்பு தொலைந்தலைந்தேனே
என்னை கண்டீரே, கண் காணேனிப்போ காண்கிறேன்.


உம் கிருபையினால், நான் நடுங்கி,
உம் தயவால் மீண்டேன் உம் காருண்யம்தான்
என் ஆஸ்தியாம், நான் நம்பினவேளை முதல்.


என் வாழ்வில் நான் கடந்தது,
துன்பம் மா வேதனை, உம் வல்லமை,
இம்மட்டுமே வழி நடத்திற்றே.


என் தேவன் எனக்காய்த்தந்த,
தம் வாக்குதத்தம் உண்மை வர் என்னை
தற்காப்பாரே, வாழ் நாள் முழுதுமே.


என் மாம்சமும் என் துடிப்பும்,
நின்று நான் சாகையில் என்னுள்ளில் அவர்
தந்ததே, இன்ப சமாதானமே.


பனி போலவே, இவ்வுலகம்,
சூர்யனும் தோன்றாதே,நம் தேவன் இன்றும்
என்றும் உண்டங்கே,இருப்பார் நம்முடன்.


அங்கே நாம் என்றும் வாழ்வோம் நித்யம்,
பிரகாசமாய் தோன்றி, என்றென்றும் நாம் அவர்
துதி பாடி போற்றி மகிழ்வோம்.

 


மகிமையின் எல்லை முதல்


மகிமையின் எல்லை முதல்
பூமி எங்கும் பறந்து,
பாடினீர் படைப்பினன்று
மேசியா வருகையும்,


பல்லவி
வந்து வாழ்த்தி போற்றி பாடி
இராஜ பாலன் தொழுவோம்.(ஆமேன்.)


மேய்ப்பர் மந்தை காத்திருக்க
இராவின் இருள் குளிரில்,
மண்ணோருடன் விண்ணின் தேவன்
சஞ்சரிக்க ஒளியாய்,


ஞானியரே யோசனை ஏன்?
ஜோதி எங்கும் வீசுதே,
வாரும் பாரும் மாந்தர் வாஞ்சை
விந்தை நட்சத்ரம் கண்டீர்,


தூய ஆவி கொண்ட நீங்கள்,
பயத்தோடு நம்பியே,
காத்திருக்க வேந்தர் வந்தார்
தோன்றுவார் தம் ஸ்தலத்தில்,


வாஞ்சித்தே மனந்திரும்ப
நரகத்தை தவிற்க,
நியாயத்தீர்ப்பு தீர்த்திடாமல்
தயவாய் கட்டவிழ்க்க,


இன்று காணும் பாலனிவர்,
தன் தந்தையின் ஸ்தானத்தில்,
தேசம் யாவும் அவர் முன்னர்
முடக்கும் முழங்கால்கள்.


அவர் படைப்பாய் நாம் ஒன்றாய்
பிதா சுதன் ஆவிக்கு
என்றும் ஒன்றாய் ஓர் தொனியாய்
மூவரான ஏகர்க்கே.

 


பொங்கிடும் உதிர ஊற்றுண்டு


பொங்கிடும் உதிர ஊற்றுண்டு இம்மானுவேலினதே,
அவ்வூற்றில் மூழ்கும் பாவிகள் முற்றும் தூயோராவாரே,
முற்றும் தூயோராவாரே, தூயோராய் ஆவாரே,
அவ்வூற்றில் மூழ்கும் பாவிகள் முற்றும் தூயோராவாரே.


சாகும் அக்கள்வன் குரூசினில் கண்டான் மகிழந்ததை,
நாமும் அப்பாக்யம் காண்போமே நம் பாவம் நீங்கவே,
நம் பாவம் நீங்கவே, நம் பாவம் நீங்கவே,
நாமும் அப்பாக்யம் காண்போமே நம் பாவம் நீங்கவே.


ஆம் தேவ ஆட்டின் இரத்தமே என்றும் தீரா ஜீவனே,
சபையோரெல்லோரும் மீண்டிட்டே இனி பாவம் செய்யாமல்,
இனி பாவம் செய்யாமல், ஆம் பாவம் செய்யாமல்,
சபையோரெல்லோரும் மீண்டிட்டே இனி பாவம் செய்யாமல்.


நானும் கண்டேன் விஸ்வாசத்தால் உம் காயம் செய்யும் மாயம்,
நல் மீட்பை தந்தே காத்திடும் நான் சாகுமட்டுமே,
நான் சாகுமட்டுமே, நான் சாகுமட்டுமே,
நல் மீட்பை தந்தே காத்திடும் நான் சாகுமட்டுமே.


மற்றோர் இன் பாடல் பாடுவேன் உம் மீட்பின் வல்லமை,
திக்கிடும் என் நாவும் பாடுமே மரித்தே கிடக்கையில்,
மரித்தே கிடக்கையில், நான் மாண்டென் குழியில்,
மற்றோர் இன் பாடல் பாடுவேன், மரித்தே கிடக்கையில்.


ஆண்டவா நீர் எனக்காயத்தம் செய்தீர்ரென்றறிவேன்,
பாத்ரமில்லா எனக்காகவே தங்க சுரமண்டலம்,
தங்க சுரமண்டலம், தங்க சுரமண்டலம்,
பாத்ரமில்லா எனக்காகவே தங்க சுரமண்டலம்.


காலா காலமாய் மீட்டியே தேவ வல்லமையினால்,
கலையா ஸ்ருதியுடன் மீட்டியே உம் நாமம் போற்றிடவே,
உம் நாமம் போற்றிடவே, உம் நாமம் போற்றிடவே,
கலையா ஸ்ருதியுடன் பாடியே உம்மை மாத்ரம் போற்றிடவே