Tamil Hymn க-வி

தெய்வ சமாதான


1. தெய்வா சமாதான இன்ப நதியே
மா பிரவாகமான வெள்ளம் போலவே
நிறைவாகப் பாயும் ஓய்வில்லாமலும்
ஓட ஆழமாயும் நித்தம் பெருகும்


Refrain
அருள் நாதர் மீதில் சார்ந்து சுகிப்பேன்
நித்தம் இளைப்பாறல் பெற்று வாழுவேன்


2. கையின் நிழலாலே என்னை மறைத்தார்
சத்ரு பயத்தாலே கலங்க விடார்
சஞ்சலம் வராமல் அங்கே காக்கிறார்
ஏங்கி தியங்காமல் தங்கச் செய்கிறார்.


3 சூர்ய ஜோதியாலே நிழல் சாயையும்
காணப்பட்டாற் போலே துன்பம் துக்கமும்
ஒப்பில்லா பேரன்பாம் சூர்ய சாயையே
அதால் வாழ் நாள் எல்லாம் சோர மாட்டேனே


1. Theyva samaathaana inpa nathiyae
Maa piravaakamaana vellam polavae
Niraivaakap paayum oyvillaamalum;
Oda aalamaayum niththam perukum


Ref
Arulnaathar meethil saarnthu sukippaen,
Niththam ilaippaaral pettu vaaluvaen.


2. Kaiyin nilalaalae ennai maraiththaar;
Saththuru payaththaalae kalanga vidaar,
Sanjalam varaamal angae kaakkiraar;
Aengith thiyangaamal thangach seykiraar.


3. Sooriya jothiyaalae nilal saayaiyum
Kaanappattar polae, thunpam thukkamum
Oppillaa paeranpaam sooriya saayaiyae;
Atal val naḷ ellam sora mattene.

 


தோட்டத்திலே


1. நான் தோட்டத்தில் தனியனாய்,
பனி சாரல் ரோஜாவின் மீது,
எந்தன் காதில் ஓசை நான் கேட்கிறேன்,
என் இயேசு மீட்பர் சப்தமே,


பல்லவி:
அவர் என்னுடனே நடக்கிறார்,
அவர் சொந்தம் நான் என்கிறார்,
என்ன இன்பம் நாம் அவர் பிள்ளைகள்,
வேர் யாரும் அறியாரே.


2. இனிமையாம் அவர் குரல்,
அங்கு பாடும் பறவை கேட்க,
அந்த கீதம்தான் அவர் தந்ததே,
என் ஆன்மா பாடுதே இதோ,


3. நான் அவருடனிருப்பேன்,
இன்னும் இராமுழுவதும் இங்கே,
என்னை போவென்றார் அவர் அன்பின்
வார்த்தை என்னை ஈர்த்ததே இதோ,

 


நடுக்குளிர் காலம்


1. நடுக் குளிர் காலம் கடும் வாடையாம் பனிக்கட்டிபோலும் குளிரும் எல்லாம், மூடுபனி ராவில் பெய்து மூடவே; நடுக் குளிர் காலம் முன்னாளே


2. வான் புவியும் கொள்ளா ஸ்வாமி ஆளவே,
அவர்முன் நில்லாது அவை நீங்குமே;
நடுக் குளிர் காலம் தெய்வ பாலர்க்கே
மாடு தங்கும் கொட்டில் போதுமே


3. தூதர் பகல் ராவும் தாழும் அவர்க்கு,
மாதா பால் புல் தாவும் போதுமானது;
கேருபின் சேராபின் தாழும் அவர்க்கே
தொழும் ஆடுமாடும் போதுமே


4. தூதர் தலைத்தூதர் விண்ணோர் திரளும்
தூய கேரூப்ப சேராப் சூழத் தங்கினும்,
பாக்கிய கன்னித் தாயே நேச சிசு தான்
முக்தி பக்தியோடு தொழுதாள்


5. ஏழை அடியேனும் யாது படைப்பேன்?
மந்தை மேய்ப்பனாயின் மறி படைப்பேன்
ஞானி ஆயின் ஞானம் கொண்டு சேவிப்பேன்;
யானோ எந்தன் நெஞ்சம் படைப்பேன்