Tamil Hymn க-வி

கேள்! ஜென்மித்த ராயர்க்கே


1. கேள் ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே
அவர் பாவ நாசகர்
சமாதான காரணர்
மண்ணோர் யாரும் எழுந்து
விண்ணோர் போல் கெம்பீரித்து
பெத்லேகேமில் கூடுங்கள்
ஜென்ம செய்தி கூறுங்கள்


Chorus
கேள் ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே


2. வானோர் போற்றும் கிறிஸ்துவே
லோகம் ஆளும் நாதரே
ஏற்ற காலம் தோன்றினீர்
கன்னியிடம் பிறந்தீர்
வாழ்க நர தெய்வமே
அருள் அவதாரமே
நீர் இம்மானுவேல் அன்பாய்
பாரில் வந்தீர் மாந்தனாய்


3. வாழ்க சாந்த பிரபுவே
வாழ்க நீதி சூரியனே
மீட்பராக வந்தவர்
ஒளி ஜீவன் தந்தவர்
மகிமையை வெறுத்து
ஏழைக்கோலம் எடுத்து
சாவை வெல்லப் பிறந்தீர்
மறு ஜென்மம் அளித்தீர்.


1. kael jenmiththa raayarkkae
vinnnnil thuththiyam aeruthae
avar paava naasakar
samaathaana kaaranar
mannnnor yaarum elunthu
vinnnnor pol kempeeriththu
pethlaekaemil koodungal
jenma seythi koorungal


Chorus
kael jenmiththa raayarkkae
vinnnnil thuththiyam aeruthae


2. vaanor pottum kiristhuvae
lokam aalum naatharae
aetta kaalam thontineer
kanniyidam pirantheer
vaalka nara theyvamae
arul avathaaramae
neer immaanuvael anpaay
paaril vantheer maanthanaay


3. vaalka saantha pirapuvae
vaalka neethi sooriyanae
meetparaaka vanthavar
oli jeevan thanthavar
makimaiyai veruththu
aelaikkolam eduththu
saavai vellap pirantheer
matru jenmam aliththeer

 


கெம்பீர இனிமை


கெம்பீரமாய் அதோ அங்கே
என் மீட்பர் காண்கிறேன்,
பார் கிரீடம் சூடி மின்னுதே,
நமக்காசீர் பேணுதே,
நல் ஆசீர் பேணுதே.


ஆம் எல்லா நாவும் போற்றுமே
அவர் மகிமையை,
நம் பாடலின் பொருள் அவர்,
எவர் பாடாதொழிவார்?
நான் பாடேன் என்பாரோ?


ஆராய்ந்து பார் நம் ஆண்டவர்
அன்பான தோற்றமே,
வல்லமை யாவும் ஆராய்ந்து,
அவர் மாட்சி போற்றுவாய்,
எல்லோர்க்கும் சொல்லுவாய்.


எம்மாந்தரும் ஒப்பாகாரே
எம்மானிடருமே,
எல்லோரிலும் பிரகாசமாய்,
சேனையாவும் காண்கிலும்,
எங்கே நாம் தேடினும்.


கண்டார் என்னை என் துன்பத்தில்
வந்தென்னை காத்தாரே,
எனக்காய் மாண்டே மீட்டாரே,
எந்தன் சாபம் தீர்த்தாரே,
என் வேதனையுமே.


நல் ஆசீர் பொங்கும் தாங்குமே,
நம் தீய கைகள்மேல்,
ஆம் வீசுமே பிரகாசமாய்,
நானும் தூங்கும் நேரமே,
நாம் தூங்கும் வேளையில்.


என் ஸ்வாசம் வாழ்வு யாவுமே,
என் உள்ளம் இன்பமும்,
என் சாவின் மீது வெல்வேனே,
அவர் என்னை மீட்டாரே,
என்னை இரட்சித்தாரே.


தம் வான வீட்டிற்கென்னையும்,
அழைப்பார் உண்மையாய்,
தளர்ந்த நானும் காண்பேனே,
அவர் வல்லமைகளே,
நான் ஆனந்தம் போங்க.


என் ஆண்டவரின் ஆஸ்தியே,
அன்பாக ஈகிறார்,
நான் ஆயிரம் தான் தந்தாலும்,
அவை யாவும் ஈடாகா,
என் யாவும் அவருக்கே.

 


கொல்கத்தா மலை மீதிலே


1. கொல்கொதா மலைமேல் தோன்றுதோர் சிலுவை
அல்லல் பழிப்பின் சின்னமதாம்
நீசப் பாவிகட்காய் நேசர் மாண்டாரதில்
நேசிப்பேன் அத்தொல் சிலுவையை


பல்லவி
அந்தச் சிலுவையை நேசிப்பேன்
பெலன் ஓய்ந்து நான் சாகும் வரை
தொல் சிலுவையை நான் பற்றுவேன்
பின் அதால் க்ரீடத்தை அணிவேன்


2. தேவாட்டுக் குட்டிதம் மாட்சிமை வெறுத்து
உலகோர் பழித்த குருசை
கல்வாரி மலைக்கே சுமந்தார் எனக்காய்
கவர்ந்த தென்னுள்ளத் தையது — அந்தச் சிலுவையை


3. என் பாவம் மன்னிக்க என்னைச் சுத்தமாக்க
நேசர் மாண்ட சிலுவையதோ !
தூய ரத்தம் தோய்ந்த அந்தச் சிலுவையின்
அழகெத்தனை மாட்சிமை பார் ! — அந்தச் சிலுவையை


4. குருசின் இழிவை மகிழ்வாய் சுமந்தே
மேன்மை பாராட்டுவேன் நிந்தையில்
பின்னால் மோட்சலோகில் நேசர் கூட்டிச் சென்று
பங்களிப்பார் தம் மகிமையில் — அந்தச் சிலுவையை

 


சாய்வேன்


பேரானந்தமே நேசருடனே
மார்பில் சாய்ந்து இளைப்பாறுவேன்
என்ன பாக்கியம் என்ன மா இன்பம்
மார்பில் சாய்ந்து இளைப்பாறுவேன்


Refrain:
சாய்வேன் சாய்வேன்
பயம் நீக்கியே காப்பாற்றுவார்
சாய்வேன் சாய்வேன்
மார்பில் சாய்ந்து இளைப்பாறுவேன்


மோட்ச யாத்திரை போவேன் ஆனந்தமாய்
மார்பில் சாய்ந்து இளைப்பாறுவேன்
ஒளி வீசிடும் பாதை எங்குமே
மார்பில் சாய்ந்து இளைப்பாறுவேன் சாய்வேன்


திகில் வந்திடும் பயம் சூழ்ந்திடும்
மார்பில் சாய்ந்து இளைப்பாறுவேன்
இயேசுவின் அருகில் நித்திய ஆனந்தம்
மார்பில் சாய்ந்து இளைப்பாறுவேன்

 


Ponnagar Inbathai Petriduvom


1. பொன்னகர் இன்பத்தைப் பெற்றிடுவோம்
துன்பமும் துக்கமும் மாறியே போம்
நன்மைச் சொரூபியை தரிசிப்போம்
நீடுழி காலம் பேரின்பமுண்டாம்.


Ref
பேரின்பமாம், பூரிப்புண்டாம்
பேரின்பமாம், பூரிப்புண்டாம்
மேலுலகில் அவர் சந்நிதியில்
மேலான வாழ்வு பேரின்பமுண்டாம்


2. மாட்சிமையான காருணியத்தால்
மோட்ச ஆனந்தத்தை அடையுங்கால்
சாட்சாத் நல் மீட்பரை நோக்குவதால்
நீடூழி காலம் பேரின்பமுண்டாம்.


3. அன்பராம் இஷ்டரைக் கண்டுகொள்வோம்,
இன்ப மா வாரியில் மூழ்கிடுவோம்
என்றைக்கும் இயேசுவை ஸ்தோத்திரிப்போம்
நீடூழி காலம் பேரின்பமுண்டாம்.


1. ponnakar inpaththaip pettiduvom
thunpamum thukkamum maariyae pom
nanmaich soroopiyai tharisippom
needuli kaalam paerinpamunndaam.


Ref
paerinpamaam, poorippunndaam
paerinpamaam, poorippunndaam
maelulakil avar sannithiyil
maelaana vaalvu paerinpamunndaam


2. maatchimaiyaana kaarunniyaththaal
motcha aananthaththai ataiyungaal
saatchaாth nal meetparai Nnokkuvathaal
neetooli kaalam paerinpamunndaam.


3. anparaam ishdaraik kanndukolvom,
inpa maa vaariyil moolkiduvom
entaikkum Yesuvai sthoththirippom
neetooli kaalam paerinpamunndaam.