Tamil Hymn க-வி

நம்பிடுவேன் எந்நாளும்


1. நம்பிடுவேன் எந்நாளும்
துன்பம் துயரானாலும்;
எந்தன் இயேசு நாதனை
அந்தம் மட்டும் பற்றுவேன்!


பல்லவி
நேரங்கள் பறந்தாலும்
நாட்கள் தான் கடந்தாலும்
என்ன தான் நேரிட்டாலும்
இயேசுவையே நம்புவேன்


2. ஏழை எந்தன் நெஞ்சிலே
வாழ்கிறார் சுத்தாவிதான்
பாதை காட்டி எந்தனை
பாதுகாத்துக் கொள்கிறார்


3. பாடுவேன் என் பாதையில்
பிரார்த்திப்பேன் என் தொல்லையில்
கேடு வரும் போதும் நான்
கிட்டி இயேசை நம்புவேன்


4. ஜீவிக்கின்ற காலமும்
சாகும் அந்த நேரமும்
சேரும் மோட்ச வீட்டிலும்,
இயேசுவையே நம்புவேன்

 


நல் மீட்பர் பட்சம் நில்லும்


1. நல் மீட்பர் பட்சம் நில்லும்! ரட்சணிய வீரரே!
ராஜாவின் கொடியேற்றி போராட்டம் செய்யுமே!
சேனாதிபதி இயேசு மாற்றாரை மேற்கொள்வார்;
பின் வெற்றி கிரீடம் சூடி செங்கோலும் ஓச்சுவார்.


2. நல் மீட்பர் பட்சம் நில்லும்! எக்காளம் ஊதுங்கால்,
போர்க்கோலத்தோடு சென்று மெய் விசுவாசத்தால்
அஞ்சாமல் ஆண்மையோடே போராடி வாருமேன்;
பிசாசின் திரள்சேனை நீர் வீழ்த்தி வெல்லுமேன்.


3. நல் மீட்பர் பட்சம் நில்லும்! எவ்வீர சூரமும்
நம்பாமல், திவ்விய சக்தி பெற்றே பிரயோகியும்;
சர்வாயுதத்தை ஈயும் கர்த்தாவை சாருவீர்;
எம்மோசமும் பாராமல் முன் தண்டில் செல்லுவீர்.


4. நல் மீட்பர் பட்சம் நில்லும்! போராட்டம் ஓயுமே;
வெம்போரின் கோஷ்டம், வெற்றி பாட்டாக மாறுமே;
மேற்கொள்ளும் வீரர் ஜீவ பொற் கிரீடம் சூடுவார்;
விண் லோக நாதரோடே வீற்றரசாளுவார்.


1. nal meetpar patcham nillum! ratchanniya veerarae!
raajaavin kotiyaetti poraattam seyyumae!
senaathipathi Yesu maattaாrai maerkolvaar;
pin vetti kireedam sooti sengaோlum ochchuvaar.


2. nal meetpar patcham nillum! ekkaalam oothungaal,
porkkolaththodu sentu mey visuvaasaththaal
anjaamal aannmaiyotae poraati vaarumaen;
pisaasin thiralsenai neer veelththi vellumaen.


3. nal meetpar patcham nillum! evveera sooramum
nampaamal, thivviya sakthi pette pirayokiyum;
sarvaayuthaththai eeyum karththaavai saaruveer;
emmosamum paaraamal mun thanntil selluveer.


4. nal meetpar patcham nillum! poraattam oyumae;
vemporin koshdam, vetti paattaka maarumae;
maerkollum veerar jeeva por kireedam sooduvaar;
vinn loka naatharotae veettarasaaluvaar.

 


நள்ளிரவில் மா தெளிவாய்


1. நள்ளிரவில் மா தெளிவாய்
மாண் பூர்வ கீதமே
விண் தூதர் வந்தே பாடினார்
பொன் வீணை மீட்டியே
“மாந்தர்க்கு சாந்தம் நல் மனம்
ஸ்வாமி அருளாலே”
அமர்ந்தே பூமி கேட்டதாம்
விண் தூதர் கீதமே.


2. இன்றும் விண் விட்டுத் தூதர்கள்
தம் செட்டை விரித்தே
துன்புற்ற லோகம் எங்குமே
இசைப்பார் கீதமே;
பூலோகக் கஷ்டம் தாழ்விலும்
பாடுவார் பறந்தே
பாபேல் கோஷ்டத்தை அடக்கும்
விண் தூதர் கீதமே.


3. விண்ணோரின் கீதம் கேட்டுப் பின்
ஈராயிரம் ஆண்டும்,
மண்ணோரின் பாவம் பகை போர்
பூலோகத்தை இன்றும்
வருந்தும் ; மாந்தர் கோஷ்டத்தில்
கேளார் அக்கானமே
போர் ஓய்ந்தமர்ந்து கேட்டிடும்
விண் தூதர் கீதமே.


4. பார் வாழ்க்கையின் மா பாரத்தால்
நைந்து தவிப்போரே,
சோர்ந்தே போய்ப் பாதை நகர்ந்து
தள்ளாடிடுவோரே,
நோக்கும், இதோ உதித்ததே
மா நற் பொற் காலமே
நோவை மறந்து கேட்டிடும்
விண் தூதர் கீதமே.


5. தோன்றிடும் இதோ சீக்கிரம்
பேரின்ப காலமே
சான்றோராம் தீர்க்கர் ஆண்டாண்டும்
உரைத்த காலமே!
போர் ஓய்ந்து பூமி செழிக்கும்
பூர்வ மாண்போடுமே
பாரெங்கும் பரந்தொலிக்கும்
விண் தூதர் கீதமே.