Tamil Hymn க-வி

காரிருளில் என் நேச


1. காரிருளில், என் நேச தீபமே, நடத்துமேன்
வேறொளியில்லை, வீடும் தூரமே, நடத்துமேன்
நீர் தாங்கின், தூர காட்சி ஆசியேன்;
ஓர் அடி மட்டும் என்முன் காட்டுமேன்.


2. என் இஷ்டப்படி நடந்தேன், ஐயோ; முன்னாளிலே;
ஒத்தாசை தேடவில்லை; இப்போதோ நடத்துமே;
உல்லாசம் நாடினேன், திகிலிலும்
வீம்புகொண்டேன், அன்பாக மன்னியும்.


3. இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர்;
இனிமேலும் காடாறு சேறு குன்றில்
தேவரீர் நடத்திடும்; உதய நேரம் வர, களிப்பேன்;
மறைந்து போன நேசரைக் காண்பேன்.Amen

 


கிரீன்லாந்தின் பனிமலை துவங்கி


கிரீன்லாந்தின் பனி மலை துவங்கி,
இந்திய பவள பாறை வரை,
ஆப்ரிக்க வெண் நீர் வீழ்ச்சி
விழுந்தோடும் மணல் மீது,
பல பழமையான நதிகளும்
பனை பாலைவனமும்,
தாம் தவறிய வழி சீராக்க,
நம்மை அழைக்குதே.


நல் நறுமணம் தவழ்ந்தே வீசுதே,
ஜாவாவின் கரையிருந்தே,
எல்லாம் நன்றாயிருக்க,
மக்கள் வாழ்வு விடிவின்றி,
வீண் தேவையற்ற வெகுமதி
பாழான வாழ்விலே,
கண்ணிருந்தும் காணாது,
கல், மரம் வணங்கியே.


நாம் பெற்ற ஞானம் ஆசீர்,
பரத்திலிருந்து, வைப்போமா
நாமே நமக்காய், அவர்க்காய்
பகிர்ந்தளிப்போம்,
இரட்சிப்பு நம் இரட்சிப்பு
நற்செய்தி இதுவன்றோ?
உலகின் கோடி தேசமும்,
நற்செய்தி சொல்வோமே.


மிதந்து நகர்ந்து செல் காற்றே
உருண்டோடும் நீரலையும்,
இரு துருவமும் தொடும்
கடலலைபோலே, அவர் நாமம்
சொல் எங்கும், நம் மீறுதலின்
விளைவாலே பலி ஆடாய்
மாண்டாரே, நம் கர்த்தர் மீட்பர்
ராஜா, வந்தாளுவார் என்றும்.

 


கூப்பிடும் அப்பொழுதே

ஆ எக்காள ஓசை கேட்குமே,
நம் காலம் காணாதே,
காலை தோன்றுமே, மா பேரொளி இதே,
மீட்கப்பட்டோர் யாவரும் அங்கே
அப்பொழுதே இதோ,நான் உள்ளேனிங்கே
என்பேனே நான் அங்கே,

பல்லவி
கூப்பிடும் அப்பொழுதே, நான் ஆங்கேதான்
நான் அங்கேதான் ஆ கூப்பிடும் அப்பொழுதே,
நான் அங்கேதானிருப்பேனே, அங்கிருப்பேன்.
கூப்பிடும் அப்பொழுதே அப்பொழுதே,
நான் அங்கேதான் இருப்பேனே இருப்பேன்,
கூப்பிடும் அப்பொழுதே, நான்
அங்கேதானிருப்பேனே, அங்கிருப்பேன்.

அந்த காலை நாமும் கிறிஸ்துவில்
மரித்தோரும் எழ,
அங்கே கிறிஸ்துயிர்த்த மகிமையிலே,
அங்கே தேர்ந்தெடுத்தோர்
சேர்ந்தே வந்தே வானத்திற்க்கப்பால்,
நாம் உள்ளேனிங்கே என்போமே நாம் அங்கே,

கூப்பிடும் அப்பொழுதே,
நாம் ஆங்கேதான் நாம் அங்கேதான்
ஆ கூப்பிடும் அப்பொழுதே, நாம்
அங்கேதானிருப்போமே, அங்கிருப்போம்.
கூப்பிடும் அப்பொழுதே அப்பொழுதே,
நாம் அங்கேதான் இருப்போமே, இருப்போம்,
கூப்பிடும் அப்பொழுதே, நாம்
அங்கேதானிருப்போமே, அங்கிருப்போம்.

நாமும் காலை தோன்றி மாலை மட்டும்
சேவை செய்வோமே, அவர் அன்பை
மாண்பை போற்றி வாழ்த்துவோம்,
இந்த வாழ்வின் தொல்லை யாவும் தீர்ந்து
போனதுமே நாம். ஆம் உள்ளேனிங்கே
என்போமே நாம் அங்கே.

கூப்பிடும் அப்பொழுதே,
நாம் ஆங்கேதான் நாம் அங்கேதான்
ஆ கூப்பிடும் அப்பொழுதே, நாம்
அங்கேதானிருப்போமே, அங்கிருப்போம்.
கூப்பிடும் அப்பொழுதே அப்பொழுதே,
நாம் அங்கேதான் இருப்போமே, இருப்போம்,
கூப்பிடும் அப்பொழுதே, நாம்.