Tamil Hymn க-வி

போ, மலைகள் மீது சொல்லு


பல்லவி
போய், மலைகள் மீது சொல்லு,
வயல்வெளி பள்ளதாக்கு,
போ, அங்கும் இங்கும் சென்று,
நம் மீட்பர் பிறந்தார்.


அம்மேய்ப்பர் மந்தை காக்க,
இரா குளிர் வேளையில்,
அதோ பார் வானில் ஜோதி,
பிரகாசமாகவே,


வான் ஒளி தோன்ற மேய்ப்பர்,
பயந்து நடுங்கி,
நம் மீட்பர் பிறந்த செய்தி,
எங்கும் பறைசாற்ற,


ஏழைக்கோலமாக,
மாடடைக்குடிலில்,
நம்மை மீட்க இங்கே,
வந்து பிறந்தாரே,

 


போற்றி போற்றி இரட்சகர்


போற்றி போற்றி இரட்சகர் இயேசுவை போற்றி,
வானும் பூவும் உம் அன்பை கூறவும்,
ஏற்றி பாடி தூதர் நீர் மென் மேலும் போற்றி
ஆண்டவரின் வல்லமை சாற்றவும்,
மேய்ப்பன் போல இயேசு தம் மந்தை காப்பார்
அன்பாய் நாளும் கரத்திலேந்தியே,
சீயோன் வாழும் தூயோரும் சான்றோரும் கூடி,
போற்றி பாடி என்றும் ஆனந்தமாய்


போற்றி போற்றி இரட்சகர் இயேசுவை போற்றி,
நம்மை மீட்க மரித்தார் பாடுண்டு,
கோட்டை அரண் நம் நித்ய வாழ்வின் ராஜன்
ஏற்றி போற்றி சிலுவை நாதரை,
அன்பாய் மீட்பர் தாழ்மையாய் சகித்தார்
முள்ளாம் கீரீடம் சிரசில் பாய்ந்திட,
நம்மை மீட்க வெறுத்து கைவிடப்பட்டு,
இன்றும் நம்மில் மகிமை நாதராய்.


போற்றி போற்றி இரட்சகர் இயேசுவை போற்றி,
வானில் தூதர் ஓசன்னா பாடவும்,
இயேசு ராஜன் என்றென்றும் ஆள்கிறார்
பூவில் கிரீடம் சூட்டி என்றென்றும் போற்றுவோம்,
சாவே சாக மாண்டது எங்கும் சொல்வோம்
உன் கூர் எங்கே? மரணமே சொல்வாய்,
இயேசு ராஜன் என்றென்றும் வாழ்கிறார் வென்று,
இன்றும் என்றும் வல்லமை ஓங்கவே.

 


பேரன்பர் இயேசு நிற்கிறார்


1.பேரன்பர்இயேசு நிற்கிறார்
மகா வைத்தியனாக
கடாட்சமாகப் பார்க்கிறார்
நல் நாமம் போற்றுவோமே


பல்லவி
விண்ணில் மேன்மை பெற்றதே
மண்ணோர்க் கின்பமாகவே
பாடிப்போற்றும் நாமமே
இயேசு என்னும் நாமம்


2.உன் பாவம் யாவும் மன்னிப்பேன்
அஞ்சாதே என்கிறாரே;
சந்தேகங் கொண்டு சோர்வதேன்?
மெய்ப் பாக்கியம் ஈகிறாரே


3.உயிர்த்த ஆட்டுக்குட்டிக்கே
மேன்மை உண்டாவதாக!
நேசிக்கிறேன் இயேசு நாமம்
நம்பிடுவேன் என்றென்றும்


4.குற்றம் பயம் நீக்கும் நாமம்
வேறில்லை இயேசுவே தான்!
என் ஆத்மா பூரிப்படையும்
அந்நாமம் கேட்கும்போது


Pearanbar yesu nirkiraar
Maha Vaithiyanaaga
Kadatchamaaga paarkiraar
Nal Naamam pottruvom


Ref
Vinnil Meanmai Pettrathae
Mannorkku Inbamaagavae
Paadi pottrum Naamamae
Yesu Ennum Naamam


Un paavam yaavaiyum Mannippean
Anjaathae Enkiraarare
Santhaekam kondu saervathaen
Mei bakkiyam Eegiraarae


Uyirtha Aattu kuttikae
Meanmai Undavathaaga
Neasikkirean Yesu Naamam
Nambiduvean Entrentrum


Kuttram Bayam Neekkum Naamam
Vearillai Yesuvae Thaan
En Aathuma Poorippadaiyum
Annaamam Keatkkum Pothu

 


போற்றுவேன் என் மீட்பர்


போற்றுவேன் என் மீட்பர் அன்பை!
ப்ராணன் தந்து ரட்சித்தார்.
பாடுபட்டு, ரத்தஞ் சிந்தி,
பாவம், சாபம் நீக்கினார்.


பல்லவி
போற்றும்! போற்றும்!! அல்லேலூயா!
பூர்ண மீட்புண்டாக்கினார்.
தூய வல்ல ரத்தம் சிந்தி,
தீய பாவம் நீக்கினார்.


நீசப் பாவி என்றன் பேரில்
நேசம் வைத்துக் காட்டினார்.
மீட்கும் பொருளாகத் தம்மை
முற்றும் தந்திடேற்றினார்.


போற்றுவேன் சம்பூர்ண மீட்பை!
நேச நாதர் காக்கிறார்,
வாழ்நாள் எல்லாம் பாவத்தின் மேல்
வெற்றி காணச் செய்கிறார்


போற்றுவேன் ஆனந்தமாகப்
பாடி நன்றி சொல்லுவேன்!
என்னை மீட்ட ஏசுவோடே
என்றும் தங்கி, சேவிப்பேன்.

or


என் மீட்பர் அன்பை என்றென்றும் நானே,
போற்றி பாடி புகழுவேன்,
அவர் எனக்காய் சிலுவையிலே,
துன்புற்று மாண்டார், எனக்காக,


பல்லவி
போற்றிப்பாடுவேன் மீட்பர் அன்பை,
இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டாரே,
சிலுவையாலே என்னை மன்னித்தார்,
என் கடன் தீர்த்தே தந்தாரே, விடுதலை.


அவர் நற்செய்தி யாவர்க்கும் சொல்வேன்
அளவில்லாத அவர் அன்பு, இலவசமாய்
நம்மை இரட்சித்தார், அவரின் அன்பை,
எங்கும் சொல்வேன்,


சாவின் மீதே ஜெயம்கொண்டாரே,
எங்கும் நான் சொல்வேன் அவர் மாண்பை,
மரணமே உன் கூர் எங்கே, எங்கே?
பாதாளமே உன் ஜெயமெங்கே,


இயேசுவின் அன்பு தெய்வீக அன்பு
என்னையும் மீட்டார், முற்றிலுமாய்
தேவகுமாரன் தம்முடன் வாழ,
இன்றும் என்றும் நித்தியமுமாய்.