Tamil Hymn க-வி

கர்த்தர் பார்த்து கொள்வார்


1.கலங்காதே என்ன நேர்ந்தாலும்
கர்த்தர் பார்த்து கொள்வார்
செட்டைகள் மறைவில் வந்திடுவாய்
கர்த்தர் பார்த்து கொள்வார்


Ref
கர்த்தர் பார்த்து கொள்வார்
உன் காரியம் உன் கவலை
யாவும் அவர் அறிவார்
கர்த்தர் பார்த்து கொள்வார்


2.உந்தனின் தேவை யாவையும்
கர்த்தர் பார்த்து கொள்வார்
நம்பிடுவாய் திருப்தி செய்குவார்
கர்த்தர் பார்த்து கொள்வார்


3.கவலை தனிமை ஆயினும்
கர்த்தர் பார்த்து கொள்வார்
மெய் சமாதானம் ஈந்திடுவார்
கர்த்தர் பார்த்து கொள்வார்


4.சோதனையால் சோர்ந்து போனாயோ
கர்த்தர் பார்த்து கொள்வார்
சாய்ந்திடு கர்த்தர் தம் மார்பினில்
கர்த்தர் பார்த்து கொள்வார்

 


கர்த்தர்தாம் எங்கள் துர்க்கமும்


1. கர்த்தர்தாம் எங்கள் துர்க்கமும்
அரண் பலமுமாமே;
உண்டாம் இக்கட்டனைத்தையும்
போக்குவார் அவர்தாமே
பொல்லாங்கனின் சினம்
இப்போது மா விஷம்,
துஷ்டமும் சூதையும்
அணிந்து உறுமும்
நிகர் புவியில் இல்லை.


2. எதற்கு நாங்கள் வல்லவர்?
இந்நீசர் சக்தியற்றோர்;
எங்களுக்காய் வேறொருவர்
போர்செய்வதற் கேற்பட்டோர்!
ஆர்? இயேசு கிறிஸ்துதான்!
ஆ இந்தப் பலவான்
ஆம் எங்கள் ரட்சகர்;
சேனாபதி அவர்
ஜெயிப்பார் அவர்தாமே.


3. விழுங்க வரும் பேய்களால்
புவி நிரம்பினாலும்
பயப்படோம்; கர்த்தாவினால்
எதிர்த்து நிற்கக்கூடும்
இருளின் பிரபு
சீறினாலும், அது
நசுக்கப்பட்ட பேய்,
தள்ளுண்ணத் தீர்ந்ததே;
ஓர் சொல்லினால் ஒழியும்.


4. பகைஞர் தெய்வ வார்த்தையை
பகைத்தும் அது நிற்கும்;
கர்த்தர் சகாயர், அவர் கை
வரம் தந்தாதரிக்கும்;
மாற்றார்கள் யாவையும்
ஜீவனையேதானும்
வாங்கினால், கேடாமோ ?
இராஜ்ஜியமல்லோ
எங்களுக்கே இருக்கும்.


1.Karthar dham engal thurkkamum
Aran balamumaame;
Undaam ikkattanaithayum
Pokkuvaar avar thaame,
Pollaanganin sinam
Ippodhu maa visham,
Dhushtamum soodhaiyum
Anindhu urumum
Nigar puviyil illai.


2. Edharkku naangal vallavar ?
Inneesar sakthiyatror;
Engalukkaai veroruvar
Porseyvadhar kerpattor.
Aar? Yesu kristhu dhan!
Aa indha balavaan
Aam engal ratchagar;
Senabadhy avar
Jeyipaar avardhaame.


3. Vizhunga varum peigalal
Puvi nirambinaalum
Bayappadom; karthaavinaal
Yedhirthu nirkakoodum.
Irulin pirabhu
Seerinaalum adhu
Nasukkappatta pei
Thallunnath theerndhadhey;
Or sollinaal ozhiyum.


4. Pagainyar dheiva vaarthayay
Pagaithum adhu nirkum;
Karthar sagaayar , avar kai
Varam thandhaadharikkum;
Maatraargal yaavaiyum
Jeevanayedhaanum
Vaanginaal kedaamo?
Iraajjiyamallo?
Engalukke yirukkum.

 


களிகூரு சீயோனே


1. களிகூரு சீயோனே,
ஓ மகிழ், எருசலேம்!
சமாதான கர்த்தராம்
உன் ராஜா வருகிறார்.
களிகூரு சீயோனே,
ஓ மகிழ், எருசலேம்!


2. ஓசியன்னா! தாவீதின்
மைந்தனே நீர் வாழ்கவே!
உம்முடைய நித்திய
ராஜ்ஜியத்தை ஸ்தாபியும்;
ஓசியன்னா! தாவீதின்
மைந்தனே நீர் வாழ்கவே!


3. ஓசியன்னா, ராஜாவே!
வாழ்க, தெய்வ மைந்தனே!
சாந்தமுள்ள உமது
செங்கோல் என்றும் ஆளவும்!
ஓசியன்னா, ராஜாவே
வாழ்க, தெய்வ மைந்தனே!