Tamil Hymn க-வி

மெய்த்தேவனைத் துதி


1. மெய்த்தேவனைத் துதி; பேர் நன்மை செய்தார்,
குமாரனைத் தந்துன்னையே நேசித்தார்.
உன் பாவத்துக்காய் யேசுவே மரித்தார்.
நீ ஜீவனை பெற ஆருயிர் தந்தார்.


பல்லவி
போற்றுவோம்! போற்றுவோம்!
ஜீவ நாயகரை,
நம்புவோம்: நம்புவோம்!
லோக ரட்சகரை!.
ஓ ஏசுவின் மூலம் நற்கதியுண்டாம்.
பிதாவின் சமூகம் கண்டடையலாம்.


2. சம்பூரண மீட்பைச் சம்பாதித்தனர்.
தம் வாக்கை அன்பருக்கருள்வேன் என
எப்பாவியானாலும் விஸ்வாசம் வைத்தால்
அந்நேரமே மன்னிப்பு உண்டாம் ஏசுவால்.


3. அதிசயமான அன்பின் பெருக்கே!
யேசுவினாலே வரும் மகிழ்ச்சியே! அந்நாளில்
இயேசுவை நான் பார்க்கும் போது
உண்டாகும் மகிழ்ச்சிக்கு வரம்புண்டோ?


1. Mei devanai thuthi Per nanmai seithaar,
Kumaaranai thanthunnaiye nesiththaar,
Un paavaththukaai yesuve mariththaar,
Nee jevanai pera aaruir thanthaar.


Pallavi
Potruvom! Potruvom!
Jeeva nayakarai,
Nambuvom! Nambuvom!
Loka retchakarai!
O! Yesuvin moolam narkathi undaam,
Pithaavin samookam kandadaiyalaam.


2. Sampoorana meetpai sampaathiththanar
Tham vaakai anbarukkarulven ena
Eppaaviyaanaalum visvaasam vaiththaal
Annerame manippundaam yesuvaal.


3. Athisayamaana anbin peruke!
Yesuvinaale varum makizhchiye!
Annaalil yesuvai naan paarkkum pothu
Undaakum mahizhchiku varampundo?

 


வாக்குத்தத்தம் நம்பி நிற்கிறேன்


கிறிஸ்து ராஜன் வாக்குத்தத்தம்
நம்பி நிற்கிறேன்,
சதா காலம் அவர் புகழ்
எங்கும் ஒலிக்க,
உன்னதத்தில் மகிமை நான்
உயர்த்தி பாடுவேன்,
வாக்குத்தத்தம் நம்பி நிற்கிறேன்.


பல்லவி
நம்பி நின்றேன்
மீட்பர் இயேசு வாக்குத்தத்தம்
என்றும் உண்மை,
நம்பி நிற்பேன், என்
மீட்பர் இயேசு வாக்குத்தத்தமே.


என்றும் வாக்கு மாறாதந்த
வாக்குதத்தமே,
அவிஸ்வாசம் சந்தேகமும்
வந்து சூழ்ந்தாலும்,
அவர் உண்மை வார்த்தை ஒன்றும்
என்றும் மாறாதே,
வாக்குத்தத்தம் நம்பி நிற்கிறேன்.


நம்பி நின்ற வாக்குத்தத்தம்
நன்று காண்கிறேன்,
என்னையவர் கழுவி சுத்திகரித்தாரே
கட்டவிழ்த்து விடுவித்த
கிறிஸ்து அவரே,
வாக்குத்தத்தம் நம்பி நிற்கிறேன்.


கிறிஸ்து எந்தன் ஆண்டவரே
தந்த வார்த்தையே,
அன்பாய் என்னை கட்டி சேர்த்து
நித்ய வாழ்வுக்காய்,
நித்தம் அவர் தூய ஆவி
சக்தி கொண்டு நான்
வாக்குத்தத்தம் நம்பி நிற்கிறேன்.


என்றும் நான் விழாமல் காக்கும்
வாக்குதத்தமே,
சொல்லும் பரிசுத்தாவி நான்
கேட்டு நிற்கிறேன்.
மீட்பர் மீது நம்பி சார்ந்தேன்,
எல்லாம் அவரே,
வாக்குத்தத்தம் நம்பி நிற்கிறேன்.

 


மென்மையாய் இயேசு அழைக்கிறாரே


1. மென்மையாய் இயேசு அழைக்கிறாரே,
உன்னையும் என்னையுமே,
பார் அங்கே வாசலில் காத்துநின்றே,
நமக்காய் காத்துநின்றே,


பல்லவி:
சோர்ந்து அயர்ந்து நொந்த நீ வந்திடு
பாவி நீ அழைக்கிறாரே, அன்போடு பாவி நீ வா.


2. தாமதமேனவர் அழைக்கயிலே,
நமக்காய் வேண்டி நின்றே,
ஏன் இன்னும் அவர் சத்தம் கேளாமலே,
நமக்காய் ஆசீர் தந்தே, நீ வா உன் வீடிதே,


3. காலமும் கடந்தே நேரம் சென்றோட,
என் காலம் உன் காலமே,
சூழ்ந்திடும் இருண்ட நிழல்களே,
நமக்காய் வந்திடுதே,


4. விந்தையாம் அன்பிது நமக்காயன்றோ?
அவர் தம் வாக்கிதுவே,
பாவிகளாயினும் தயை மன்னிப்பும்,
நமக்காய் தந்திட்டாரே,

 


ரட்சா பெருமானே பாரும்


1. ரட்சா பெருமானே, பாரும்,
புண்ணிய பாதம் அண்டினோம்
சுத்தமாக்கி சீரைத் தாரும்,
தேடிவந்து நிற்கிறோம்!
இயேசு நாதா, இயேசு நாதா
உந்தன் சொந்தமாயினோம்


2. மேய்ப்பன் போல முந்திச் சென்றும்
பாதுகாத்தும் வருவீர்;
ஜீவ தண்ணீரண்டை என்றும்
இளைப்பாறச் செய்குவீர்;
இயேசு நாதா, இயேசு நாதா
உந்தன் சொந்தமாயினோம்


3. நீதி பாதை தவறாமல்
நேசமாய் நடத்துவீர்;
மோசம் பயமுமில்லாமல்
தங்கச் செய்து தாங்குவீர்;
இயேசு நாதா, இயேசு நாதா
உந்தன் சொந்தமாயினோம்


4. ஜீவ கால பரியந்தம்
மேய்த்தும் காத்தும் வருவீர்;
பின்பு மோட்ச பேரானந்தம்
தந்து வாழச் செய்குவீர்;
இயேசு நாதா, இயேசு நாதா
உந்தன் சொந்தமாயினோம்


1. ratcha perumaanae, paarum,
punnnniya paatham anntinom
suththamaakki seeraith thaarum,
thaetivanthu nirkirom!
Yesu naathaa, Yesu naathaa
unthan sonthamaayinom


2. maeyppan pola munthich sentum
paathukaaththum varuveer;
jeeva thannnneeranntai entum
ilaippaarach seykuveer;
Yesu naathaa, Yesu naathaa
unthan sonthamaayinom


3. neethi paathai thavaraamal
naesamaay nadaththuveer;
mosam payamumillaamal
thangach seythu thaanguveer;
Yesu naathaa, Yesu naathaa
unthan sonthamaayinom


4. jeeva kaala pariyantham
maeyththum kaaththum varuveer;
pinpu motcha paeraanantham
thanthu vaalach seykuveer;
Yesu naathaa, Yesu naathaa
unthan sonthamaayinom

 


ராயல் டேவிட் நகரில் ஒருமுறை


1. ராஜன் தாவீதூரிலுள்ள
மாட்டுக் கொட்டில் ஒன்றிலே
கன்னி மாதா பாலன் தன்னை
முன்னணையில் வைத்தாரே
மாதா மரியம்மாள்தான்
பாலன் இயேசு கிறிஸ்துதான்.


2. வானம் விட்டுப் பூமி வந்தார்,
மா கர்த்தாதி கர்த்தரே,
அவர் வீடோமாட்டுக்கொட்டில்,
தொட்டிலோ முன்னணையே,
ஏழையோடு ஏழையாய்
வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய்.


3. ஏழையான மாதாவுக்கு
பாலனாய்க் கீழ்ப்படிந்தார்
பாலிய பருவம் எல்லாம் அன்பாய்
பெற்றோர்க்கு அடங்கினார்
அவர்போல் கீழ்ப்படிவோம்
சாந்தத்தோடு நடப்போம்.


4. பாலர்க்கேற்ற பாதை காட்ட
பாலனாக வளர்ந்தார்
பலவீன மாந்தன்போல
துன்பம் துக்கம் சகித்தார்
இன்ப துன்ப நாளிலும்
துணைசெய்வார் நமக்கும்.


5. நம்மை மீட்ட நேசர்தம்மை
கண்ணால் கண்டு களிப்போம்
அவர்தாமே மோக்ஷ லோக
நாதர் என்று அறிவோம்
பாலரை அன்பாகவே
தம்மிடத்தில் சேர்ப்பாரே.


6. மாட்டுத் தொழுவத்திலல்ல
தெய்வ ஆசனத்திலும்
ஏழைக்கோலமாக அல்ல
ராஜ கிரீடம் சூடியும்
மீட்பர் வீற்றிருக்கின்றார்,
பாலர் சூழ்ந்து போற்றுவார்.