Tamil Hymn க-வி

ராயல் டேவிட் நகரில் ஒருமுறை


1. ராஜன் தாவீதூரிலுள்ள
மாட்டுக் கொட்டில் ஒன்றிலே
கன்னி மாதா பாலன் தன்னை
முன்னணையில் வைத்தாரே
மாதா மரியம்மாள்தான்
பாலன் இயேசு கிறிஸ்துதான்.


2. வானம் விட்டுப் பூமி வந்தார்,
மா கர்த்தாதி கர்த்தரே,
அவர் வீடோமாட்டுக்கொட்டில்,
தொட்டிலோ முன்னணையே,
ஏழையோடு ஏழையாய்
வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய்.


3. ஏழையான மாதாவுக்கு
பாலனாய்க் கீழ்ப்படிந்தார்
பாலிய பருவம் எல்லாம் அன்பாய்
பெற்றோர்க்கு அடங்கினார்
அவர்போல் கீழ்ப்படிவோம்
சாந்தத்தோடு நடப்போம்.


4. பாலர்க்கேற்ற பாதை காட்ட
பாலனாக வளர்ந்தார்
பலவீன மாந்தன்போல
துன்பம் துக்கம் சகித்தார்
இன்ப துன்ப நாளிலும்
துணைசெய்வார் நமக்கும்.


5. நம்மை மீட்ட நேசர்தம்மை
கண்ணால் கண்டு களிப்போம்
அவர்தாமே மோக்ஷ லோக
நாதர் என்று அறிவோம்
பாலரை அன்பாகவே
தம்மிடத்தில் சேர்ப்பாரே.


6. மாட்டுத் தொழுவத்திலல்ல
தெய்வ ஆசனத்திலும்
ஏழைக்கோலமாக அல்ல
ராஜ கிரீடம் சூடியும்
மீட்பர் வீற்றிருக்கின்றார்,
பாலர் சூழ்ந்து போற்றுவார்.

 


வயல் உழுது தூவி


1.வயல் உழுது தூவி
நல் விதை விதைப்போம்;
கர்த்தாவின் கரம் அதை
விளையச் செய்யுமாம்;
அந்தந்தக் காலம் ஈவார்
நற்பனி மழையும்
சீதோஷ்ணம் வெயில் காற்று
அறுப்பு வரையும்.


Ref
நல் ஈவுகள் யாவும்
ஈபவர் கர்த்தரே;
துதிப்போம் என்றும் துதிப்போம்
அவர் மா அன்பையே.


2.விண் வானம் ஆழி பூமி
அவரே சிருஷ்டித்தார்;
புஷ்பாதி விண் நட்சத்திரம்
பாங்காய் அமைக்கிறார்;
அடக்கி ஆழி காற்று
உண்பிப்பார் பட்சிகள்;
போஷிப்பிப்பார் அன்றன்றும்
மைந்தாராம் மாந்தர்கள்.


3.நல் ஈவு பலன் பாக்கியம்
விதைப்பு அறுப்பை
ஜீவன் சுகம் ஆகாரம்
தரும் பிதா உம்மைத்
துதிப்போம், அன்பாய் ஏற்பீர்
படைக்கும் காணிக்கை;
யாவிலும் மேலாய்க் கேட்கும்
தாழ்மையாம் உள்ளத்தை.

 


வல்லமை உண்டு உண்டு


வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை
இயேசுவின் இரத்தத்தில்!
வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால்!


Vallamai Unndu Unndu Arputha Vallamai
Yesuvin Iraththaththil!
Vallamai Unndu Unndu Arputha Vallamai
Aattukkuttiyin Iraththaththaal!