Tamil Hymn க-வி

கதை சொல்ல ஆவல்


என் இயேசு வாழ்ந்த வாழ்க்கையின்
நற்செய்தி சொல்லிடுவேன்,
அவர் மகிமை என்றும்,
அவர் வல்லமையையும்,
நான் சொல்லுவேன் அச்செய்தி,
என்றென்றும் அது சத்தியம்,
என் ஆன்ம வாஞ்சை இதே,
வேறொன்றும் செய்யேனே,


பல்லவி
இதை சொல்ல சொல்ல ஆசை,
என் மீட்பின் விந்தை செய்தி
என் இயேசுவின் நற்செய்தி
சொல்வேன் நான் மீண்டும் மீண்டுமே.


என் இயேசு வாழ்ந்த வாழ்க்கையின்
நற்செய்தி சொல்லிடுவேன்,
என் ஆன்ம கனா வாஞ்சை,
என் வாழ்விற்கது ஜீவன்,
நான் சொல்லுவேன் அச்செய்தி
என் வாழ்வில் அதன் தாக்கம்,
அதால் நான் என்றும் சொல்வேன்,
எங்கேயும் எல்லோர்க்கும்,


என் இயேசு வாழ்ந்த வாழ்க்கையின்
நற்செய்தி சொல்லிடுவேன்,
நான் மீண்டும் மீண்டும் சொல்ல,
ஆ இன்ப இன்பமே, நற்செய்தி
இன்னும் சொல்வேன், இன்றும்
இவ்விந்தை செய்தி, கேளாதோர்காய்
நான் சொல்வேன், நல் இரட்சிப்பின் செய்தி,


இந்நற்செய்தியை கேட்டோர்க்கும்
இதின்ப இன்பமே,
தம் ஆத்ம தாகம் தீர்க்கும்,
கேட்டோர்க்கும் மற்றோர்கும்,
மகிமையின் சமயம்,
புது பாடல் நானும் பாடுவேன்,
நான் நேசிக்கும் இச்செய்தி,
ஆ இன்ப இன்பமே,

 


கர்த்தரின் வேலை செய்வீர்


1. கர்த்தரின் வேலை செய்வீர்
விடியற் காலத்தில்
வைகறை சுகமான
நல்ல நேரத்தில்
சூரியன் வானில் ஏறி
கிரணம் வீசவும்
ராத்திரி மா சமீபம்
வேலை ஓய்ந்திடும்.


2. கர்த்தரின் வேலை செய்வீர்
உஷ்ண வேளையும்
வெயிலும் எரித்தாலும்
ஒளியாதிரும்
ஊழியம் செய்து வாரும்
இடைவிடாமலும்
ராத்திரி மா சமீபம்
வேலை ஓய்ந்திடும்.


3. கர்த்தரின் வேலை செய்வீர்
பொழுது போகுமே
சிவந்த வானம் பாரும்
ஒளி நீங்குமே
சத்திய காலமாகி
இருள் உண்டாகவும்
ராத்திரி மா சமீபம்
வேலை ஓய்ந்திடும்.

 


கர்த்தர் பார்த்து கொள்வார்


1.கலங்காதே என்ன நேர்ந்தாலும்
கர்த்தர் பார்த்து கொள்வார்
செட்டைகள் மறைவில் வந்திடுவாய்
கர்த்தர் பார்த்து கொள்வார்


Ref
கர்த்தர் பார்த்து கொள்வார்
உன் காரியம் உன் கவலை
யாவும் அவர் அறிவார்
கர்த்தர் பார்த்து கொள்வார்


2.உந்தனின் தேவை யாவையும்
கர்த்தர் பார்த்து கொள்வார்
நம்பிடுவாய் திருப்தி செய்குவார்
கர்த்தர் பார்த்து கொள்வார்


3.கவலை தனிமை ஆயினும்
கர்த்தர் பார்த்து கொள்வார்
மெய் சமாதானம் ஈந்திடுவார்
கர்த்தர் பார்த்து கொள்வார்


4.சோதனையால் சோர்ந்து போனாயோ
கர்த்தர் பார்த்து கொள்வார்
சாய்ந்திடு கர்த்தர் தம் மார்பினில்
கர்த்தர் பார்த்து கொள்வார்