Tamil Hymn அ-ஓ

ஓசன்னா பாலர் பாடும்


1. கர்த்தாவின் நாமத்தாலே
வருங் கோமானே நீர்
தாவீதின் ராஜ மைந்தன்
துதிக்கப்படுவீர்.


2. உன்னத தூதர் சேனை
விண்ணில் புகழுவார்
மாந்தர் படைப்பு யாவும்
இசைந்து போற்றுவார்.


3. உம்முன்னே குருத்தோலை
கொண்டேகினார் போலும்
மன்றாட்டு, கீதம், ஸ்தோத்ரம்
கொண்டும்மைச் சேவிப்போம்.


4. நீர் பாடுபடுமுன்னே
பாடினார் தூதரும்
உயர்த்தப்பட்ட உம்மை
துதிப்போம் நாங்களும்.


5. அப்பாட்டைக் கேட்டவண்ணம்
எம் வேண்டல் கேளுமே
நீர் நன்மையால் நிறைந்த
காருணிய வேந்தரே.

 


ஓசையில்லா, தூய இரா


ஓசையில்லா, தூய இரா,
யாவுமே அமைதியாய்,
கன்னி மைந்தனும் அன்னையுமாய்,
தூய பாலன் பொன் மேனி யுடன்,
தூங்கு சாந்தமாய் நீயும்,
தூங்கிடு சாந்தமாய் நீ.


ஓசையில்லா, தூய இரா,
மேய்ப்பரும் நடுங்கிட,
விண்ணில் பேரொளி வீசிடவே,
தேவ தூதரும் பாடிடவே,
கிறிஸ்து தோன்றினாரே,
கிறிஸ்தேசு தோன்றினாரே.


ஓசையில்லா, தூய இரா,
தந்தையின் மைந்தனாம்,
ஒளிர்விடும் உந்தன் திவ்ய முகம்,
மீட்பின் வாஞ்சையின் சாந்தமன்றோ?
உந்தன் முன்னணை வந்தோம்,
உந்தன் முன்னணை வந்தோம்.


ஓசையில்லா, தூய இரா,
விந்தையாய் நட்சத்திரம்,
ஒளிர்ந்து வீசி நல் பாதை காட்ட,
சேர்ந்து தூதருடன் பாடுவோம்,
பிறந்தார் மீட்பரின்று,
பிறந்தார் கிறிஸ்து இன்று.