Tamil Hymn அ-ஓ

என் ஆத்ம நேசர் எந்தன் மீட்பர் இயேசு


என் ஆத்ம நேசர் எந்தன் மீட்பர் இயேசு
என் தாழ்மையில் கண்டெடுத்தார்
என் ஆத்ம தாகம் தீர்த்து போஷித்து
என் கண்கள் இளைப்பாற செய்வார்


Chorus
தம் கரம் கொண்டு என்னை மூடி காத்து
கன்மலையின் பிழவில் வைத்து
தம் கரம் கொண்டு என்னை மூடி காத்து
தம் மகிமையால் மூடி கொண்டார்


என் ஆத்ம நேசர் எந்தன் மீட்பர் இயேசு
என் பாரம் சுமந்து தீர்த்தார்
தம் கரத்தினால் என்னை தாங்கி கொண்டு
என் வாழ்க்கையின் பெலனானார்

 


என் ஆத்மா திடமாய் உள்ளதே


அமைதி என்னில் நதி போல் பொங்கினும்
அலை மோதும் தீங்காயினும்
என்ன நேரிட்டாலும் நீர் கற்ப்பித்தீரே
என் ஆத்மா திடமாய் உள்ளதே


Ref
என் ஆத்மா திடமாய்
என் ஆத்மா திடமாய் உள்ளதே


Amaidhi ennil nadhi pol ponginum
Alai modhum theengayinum
Enna neritaalum neer karpithirae
En aathma thidamaai ullathae


Ref
En athma thidamai
En aatha thidamaai ullathae

 


என் இயேசுவே உம்மையே


1. என் யேசுவே! உம்மையே நான் நேசிக்கிறேன்;
வேறெந்த வீண் வாழ்வையும் நாடாதிருப்பேன்;
உம்மாலே மா நன்மையை நான் கண்டடைந்தேன்;
என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன்.


2. இப்பாவியின் பேரில் முந்தி நேசம் வைத்தீர்;
நீர் பிராணத்தியாகஞ் செய்து மீட்டுக்கொண்டீர்;
முட் க்ரீடம் ஐங்காயமும் தியானிக்கிறேன்;
என் நாதா! மேன் மேலும் உம்மை நேசிக்கிறேன்.


3.பேரன்பின் சொரூபி! உம்மைப் போற்றுகிறேன்;
எப்போதும் உம்மண்டை தங்க வாஞ்சிக்கிறேன்;
என் ஜீவன் போனாலுங்கூட நீங்கமாட்டேன்;
என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன்.


4.பேரின்ப மேலோகத்தில் ஆனந்தங்கொள்வேன்;
நீடூழி உம்முகம் கண்டு ஸ்தோத்திரிப்பேன்;
எப்பாவ மில்லாமலும் நான் வாழ்த்தல் செய்வேன்
என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன்.