Tamil Hymn அ-ஓ

என் மீட்பர் ரத்தம் சிந்தினார்


1. என் மீட்பர் ரத்தம் சிந்தினார்,
மா நீதியும் சம்பாதித்தார்;
என் சொந்த நீதி வெறுத்தேன்,
இயேசுவின் நாமம் நம்புவேன்;
நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான்,
வேறஸ்திபாரம் மணல் தான்.


2. கார் மேகம் அவர் முகத்தை
மறைக்கும் காலம், அவரை
எப்போதும்போல நம்புவேன்,
மாறாதவர் என்றறிவேன்;
நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான்,
வேறஸ்திபாரம் மணல் தான்.


3. மரண வெள்ளம் பொங்கினும்,
என் மாம்சம் சோர்ந்து போயினும்,
உன் வாக்குத்தத்தம் ஆணையும்
என் நெஞ்சை ஆற்றித் தேற்றிடும்;
நன் நிற்கும் பாறை கிறிஸ்து தான்,
வேறஸ்திபாரம் மணல் தான்.


4. நியாயத்தீர்ப்புக் காலத்தில்
எக்காள சத்தம் கேட்கையில்,
அஞ்சேன் என் மீட்பர் நீதியே
அநீதன் என்னை மூடுமே;
நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான்,
வேறஸ்திபாரம் மணல் தான்.

 


என்னை கடந்து செல்லாமல்


என்னை கடந்து செல்லாமல்
மன்றாட்டைக்கேளும்,
வேறு யாரும் கூப்பிட்டாலும்,
கேளும் விண்ணப்பம்.


பல்லவி
மீட்பரே, மீட்பரே,
மன்றாட்டைக்கேளும்
யாரும் உம்மைக்கூப்பிட்டாலும்,
என் அழுகுரல் கேளும்.


உம் கிருபாசனத்தினண்டை
மெய் விடுதலை,
நானும் நின்று முழங்காலில்,
நம்பச்செய்யுமே.


உந்தன் வல்லமையை நம்பி
உம்மை நோக்குவேன்,
எந்தன் நொறுங்குண்ட ஆவி
தயவால் காரும்.


என் சுகத்தின் ஜீவ ஊற்றே
வாழ்வினும் மேலே,
பூவில் யார் உண்டு
எனக்கு மோட்சத்திலுமே.

 


என்னோடிரும், மா நேச கர்த்தரே


1. என்னோடிரும், மா நேச கர்த்தரே,
வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே;
மற்றோர் சகாயம் அற்றபோதிலும்,
நீங்கா ஒத்தாசை நீர், என்னோடிரும்.


2. நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும்,
இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்;
கண் கண்ட யாவும் மாறி வாடிடும்;
மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும்.


3. நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன்;
நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன்;
சாவே, எங்கே உன் கூரும் ஜெயமும்?
நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும்.


4. நான் சாகும் அந்தகார நேரத்தில்
உம் சிலுவையைக் காட்டும்; சாகையில்
விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும்;
வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்.


1. ennodirum, maa naesa karththarae,
velichcham mangi iruttayittre;
mattror sagaayam attrapothilum,
neengaa oththaasai neer, ennodirum.


2. neermael kumilipol en aayusum,
immaiyin inba vaalvum neengidum;
kann kannda yaavum maari vaadidum;
maaraatha karththar neer, ennodirum.


3. neer aaseervathiththaal kanneer vidaen;
neerae ennotirunthaal anjitaen;
saavae, engae un koorum jeyamum?
naan ummaal vella neer ennodirum.


4. naan saagum anthakaara naeraththil
um siluvaiyaik kaattum; saakaiyil
vinn jothi veesi irul neekkidum;
vaalnaal saangaalilum ennodirum.